நிலமாற்றம்
நிலமாற்றம்:
வருவாய்
நிலை ஆணை எண் 23
· இத்திட்டத்தின் கீழ் அரசு புறம்போக்கு
நிலங்களை மைய அரசுத் துறைகளுக்கு, வழக்கமான சந்தை மதிப்பினை வசூலித்துக்
கொண்டு நிலமாற்றம் செய்யப்படுகிறது.
· பள்ளிக் கட்டடங்கள், மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள்
போன்ற வணிக நோக்கமில்லாத காரணங்களுக்காக நிலக்கிரயமின்றி, நிலமதிப்பு வசூல் மட்டும் செய்து கொண்டு நிலமாற்றம் செய்யப்படுகிறது.
வருவாய்
நிலை ஆணை எண் 24
· பொது நோக்கங்களுக்காகவும் சமுதாய நலனை
முன்னேற்றுவதற்காகவும் அரசு சார்பு நிறுவனங்கள்,
உள்ளாட்சி
அமைப்புகள் போன்றவை பல்கலைக்கழகங்கள்,
தகவல்
தொழில்நுட்பப் பூங்காக்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்களுக்கு சில
நிபந்தனைகளுக்குட்பட்டு அரசு நிலங்களை உரிமை மாற்றம் செய்கின்றன.
· எந்த நோக்கத்திற்காக நிலமாற்றம்
செய்யப்பட்டதோ, அவற்றிற்காக முழுமையாகப் பயன்படுத்தப்படாத
பட்சத்தில் அத்தகைய நிலங்கள் மீளப் பெறப்படும்.
· அதே நேரத்தில் உரிமை நிபந்தனைகள் மீறப்பட்டிருப்பின் எந்தவிதமான
இழப்பீட்டுத் தொகையையும் வழங்காமல் நிலங்கள் அரசால் மீளப் பெறப்படும்.
கிராம
நிர்வாக அலுவலரின் பணிகள்:
· நிலமாற்றம் நேர்வில், கேட்புத் துறைக்கு நிலம் வழங்குவது குறித்து,
கிராமத்தில்
தண்டோரா மூலம் கிராம நிர்வாக அலுவலர் விளம்பரம் செய்ய வேண்டும்.
· பொதுமக்களிடம் ஆட்சேபணை இல்லை என்பதை
உறுதி செய்து கொள்ள வேண்டும்.
· மேலும் நிலத்தின் சந்தை மதிப்பினை
நிர்ணயம் செய்ய அக்கம் பக்கத்திலுள்ள நிலங்களின் உண்மை மதிப்பினை தெரிவிக்க
வேண்டும்.
Subscribe to:
Posts
(
Atom
)
No comments :
Post a Comment