வருவாய் பதிவு மாற்றங்கள் – முறைகள்
வருவாய் பதிவு
மாற்றங்கள் – முறைகள்:
· வருவாய் நிலை ஆணை எண்: 31-இல் கண்ட விதிமுறைகளின்படி பட்டா
மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
பட்டா
மாற்றுதல்
· உரிமையாளர்கள் தாங்களாகவே தங்கள் உரிமையை
மாற்றிவிடுதல்
· நீதிமன்றங்களின் தீர்ப்புகள் மற்றும்
வருவாய்த் துறையினரின் விற்பனைகளால் மாறுதல்
· வாரிசுதாரருக்கு சட்ட முறையினால் மாறுதல்
என மூன்று வகைப்படும்.
· உரிமையாளர்கள் தாங்களாகவே தங்கள் உரிமையை
மாற்றி விடுதல்
· நிலத்தின் பட்டாதாரர் தன் நிலத்தை
தனியொருவருக்கு விற்பனை செய்தல் அல்லது தானம் கொடுத்தல்.
· மற்றொருவர் நிலத்துடன் தன் நிலத்தை
பரிவர்த்தனை செய்தல்.
· தனிநபர் தன் நிலத்தின் உரிமையை அரசுக்கு
விட்டு விடுதல்.
· நிலங்களை பாகப்பிரிவினை செய்தல்.
· நிலங்களை அவரவர் பங்கிற்கு ஏற்ப
உட்பிரிவு செய்தல்.
· தனியார் நிலங்களின் நன்செய்/புன்செய் வகைப்பாடுகளை மாற்றுதல்.
நீதிமன்றங்களின்
தீர்ப்புகள் மற்றும் வருவாய்த்துறையின் விற்பனைகளால் மாறுதல்:
· நீதிமன்றத்தின் தீர்ப்புகளால் நில உரிமை
மாறுபடுதல்.
· நீதிமன்றத்தால் நிலங்கள் விற்கப்படுதல்.
· அரசு வரி பாக்கிக்காக தனியார் நிலங்களை
அரசு ஏலம் விட்டு அரசு வாங்கியது / அதனை தனி நபருக்கு ஏலம் விடுவது.
· நிலமெடுப்பு மூலமாக, தனியார் நிலங்கள் எடுக்கப்படுதல்.
· வாரிசு இல்லாததால் அரசுக்கு வரப்பெற்ற சொத்துக்கள்.
வாரிசுதாரருக்குச்
சட்ட முறையினால் மாறுதல்:
· வாரிசுதாரர்களுக்கு பதிவு மாற்றம்
செய்தல்.
· பட்டாதாரர் காணாமல் போகும் போது
வாரிசுதாரர்களின் பெயரில் மாற்றம் செய்தல்.
· கைப்பற்று நிலம் 12-ஆண்டுகளுக்கும் மேலாக வேறு நபர்களின்
அனுபோகத்தில் இருப்பின் பட்டா மாறுதல் செய்தல்.
பட்டா
மாறுதல் நடவடிக்கைகள் குறித்து கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள்:
· பட்டா மாறுதல் கோருபவரின் விண்ணப்பத்தில்
கண்ட புல எண், பரப்பு வகைபாடு சரியாக உள்ளதா என்பதனை
தெளிவு செய்ய வேண்டும்
· சிட்டாவில் அவர் பெயர் உள்ளதா, அவருக்கும், நிலத்திற்கும் என்ன தொடர்பு என்பதனை
தெளிய வேண்டும்.
· நிலத்தை விற்றவருக்கும், விற்பனை செய்வதற்கான உரிமை / அதிகாரம் உள்ளதா என்பதனை ஆராய வேண்டும்.
· ஒரு புலத்தின் முழு அளவும்
விற்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதனை ஆய்வு செய்ய வேண்டும்.
· நிலத்தின் உரிமை குறித்து நீதிமன்ற
வழக்குகள் உள்ளனவா என்பதனை ஆராய வேண்டும்.
· நீதிமன்ற தீர்ப்பின் பேரில் மாறுதல், உட்பிரிவு கோரப்பட்டால், நீதிமன்ற நகல் இணைக்கப்பட்டுள்ளதா
என்பதனையும் அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும்.
· எந்தவொரு காரணத்தையும் முன்னிட்டும் பட்டா மாறுதல் கோருபவருக்கு அதற்கான
உரிமை உள்ளதா, அவ்வுரிமை எவ்வாறு கிடைத்தது அதற்கு
எதாவது ஆதாரம் உள்ளதா என்பதனை ஆராய வேண்டும்.
பட்டா
மாறுதல் நடவடிக்கைகளுக்கு கிராமக் கணக்குகளில் மாறுதல் மேற்கொள்ளுதல்:
· நிலத்தின் பட்டாதாரர் தன் நிலத்தை
தனியாருக்கு விற்பனை செய்தல், தானம் செய்தல், மற்றொருவர் நிலத்தினை தன் நிலத்திற்கு பதிலாக மாற்றிக் கொள்ளுதல் போன்ற
நிகழ்வுகளில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்கள் பதிவு பெற்று படிவம் 13-வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.
· படிவம் 13-வரப் பெற்றவுடன் வட்டாட்சியர்
அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கணக்கு எண் 6-1-இல் பதியப்பட்டு VAOவின் அறிக்கைக்காக அனுப்பப்படும். VAOவின் அறிக்கைப்பெற்று மண்டல துணை வட்டாட்சியரால்
உத்தரவு பிறப்பிக்கப்படும்.
· படிவம் 13-வரப் பெற்றவுடன் வட்டாட்சியர்
அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கணக்கு எண் 6-1-இல் பதியப்பட்டு VAOவின் அறிக்கைக்காக அனுப்பப்படும். VAOவின் அறிக்கைப்பெற்று மண்டல துணை
வட்டாட்சியரால் உத்தரவு பிறப்பிக்கப்படும்.
· இந்த விவரங்கள் கிராமக் கணக்கு எண் 3,
பிரிவு 3-இன் கலம் 8, 9, 10-இல் பதியப்படும். கிராமக் கணக்கு எண்2, (10-1) சிட்டா ஆகியவற்றிலும், மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.
தனிநபர்
தன் நிலத்தினை அரசுக்கு விட்டுவிடும் போது:
· அரசுக்கு தன் உரிமையை விட்டுவிடுதல்
நிலையை ஏற்று வட்டாட்சியர் உத்தரவு பிறப்பிப்பதுடன் கிராமக் கணக்கு எண் 3 பிரிவு 1-இல் பதியப்படும். இது நிரந்தரமான மாறுதல்
என்பதால் கிராம ‘அ’ பதிவேட்டின் உள்ளடக்கம்,
அடங்கல், சிட்டா ஆகியவற்றில் மாறுதல் மேற்கொள்ளப்படும். அவர் அரசுக்கு வழங்கிய
நிலங்களில் உட்பிரிவு செய்யப்படின் புலவரைப்பட சுவடியிலும் மாறுதல்
மேற்கொள்ளப்படும்.
· பட்டாதாரர் காணாமல் போகும் இனங்களில்
வாரிசுதாரர்களின் பெயரில் பட்டா மாறுதல் செய்ய வேண்டும்.
· கைப்பற்றிய நிலம் 12-ஆண்டுகளுக்கும் மேலாக வேறு நபர்களின் அனுபோகத்தில்
இருந்தால்
நில உரிமையை விட்டுக் கொடுத்தல்
· ஒரு பட்டாதாரர் தனக்குள்ள கைப்பற்று
நிலங்கள் மீது உள்ள உரிமையை தானாகவே விட்டுக் கொடுக்கலாம் அல்லது கைவிடலாம்.
உரிமையை விட்டுக்கொடுப்பதை ஏற்றுக் கொள்ளும் அதிகாரம் வட்டாட்சியருக்கு உண்டு.
· இதற்குண்டான மனு, கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டுள்ளதா என்பதை கிராம நிர்வாக அலுவலர்
சரிபார்க்க வேண்டும்.
· விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள
விவரங்களை, கிராமக் கணக்குகளுடன் ஒப்பிடும்போது
சரியாக இருக்க வேண்டும்.
· நிபந்தனை அடிப்படையில் ஒப்படை
செய்யப்பட்ட நிலங்களாக இருக்கக் கூடாது.
· கைவிடக் கோரும் நிலத்திற்குச் செல்ல வழி
இருக்க வேண்டும். பட்டாதாரரின் நிலங்களில் நடுப்பகுதியில் இந்நிலம்
அமைந்துவிட்டால், பிற்காலத்தில் நிலத்திற்குச் செல்ல
வழியில்லாமல் போகும்.
· வெள்ளம் பாதிக்கக்கூடிய நிலங்கள் தவிர, மற்றபடி நன்செய்யில் ஒரு ஏக்கராவிற்கு மேற்பட்டதாகவும் புன்செய்யில் 2 ஏக்கராவிற்கு மேற்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
· கூட்டுப் பட்டாவாக இருந்தால் அனைத்து
கைப்பற்றுதாரர்களும் உரிமையை விட்டுக் கொடுக்க சம்மதித்திருக்க வேண்டும்.
· உரிமையைத் துறப்பவர் இந்நில உரிமை
துறப்பு மனுவில் எந்த நிபந்தனையும் விதிக்கக் கூடாது.
· மேற்கண்ட அனைத்தையும் சரிபார்த்து, கிராம நிர்வாக அலுவலர், தனது பரிந்துரையை வட்டாட்சியருக்கு
வருவாய் ஆயவாளர் மூலம் அனுப்ப வேண்டும்.
· இச்சட்டத்தின் கீழ் அவ்வப்போது
வழங்கப்படும் அறிவிப்புகளை கிராமத்தில் விளம்பரம் செய்வதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவிப்புகளை சார்வு செய்ய வேண்டும்.
· உபரி நிலங்களை ஒப்படை கோரும்
விண்ணப்பத்தாரார்களுடைய தகுதி குறித்தான அனைத்து விவரங்களையும் விசாரணையில்
விடுபடாமல் தெரிவிக்க வேண்டும்.
· நிலமதிப்பு வசூல் செய்வதற்கு கிராம நிர்வாக
அலுவலர் நிலமதிப்பு லெட்ஜர் (ம) வசூல் கணக்குகளைப் பராமரிக்க வேண்டும்.
· உபரி நிலமானது ஏற்கனவே குத்தகைதாரர்
கைப்பற்றில் இருந்தால், அத்தகைய நிலத்தை, உபரி நிலமாக அறிவிப்பு செய்த நாள் முதல் ஒப்படை செய்யும் நாள் வரையில் உள்ள
குத்தகைப் பணத்தை அவரிடம் வசூல் செய்ய வேண்டும்.
Subscribe to:
Posts
(
Atom
)
No comments :
Post a Comment