குடிவாராச் சட்டங்கள்
குடிவாராச்
சட்டங்கள்:
· இரயத்துவாரி பிரிவினர் என்பவர் அரசு நிலங்களை விவசாயம் செய்து அவற்றிற்கான
வரியை நேரடியாக கட்டி இடைத்தரகர்கள் எவரும் இல்லாமல் உரிமையை அனுபவிப்பதே ஆகும்.
1955-ஆம் ஆண்டு தமிழ்நாடு பயிரிடும்
குத்தகைத்தாரர் பாதுகாப்புச் சட்டம்: (தமிழ்நாடு சட்டம் 22/55)
· இச்சட்டம் குத்தகைத்தாரர்கள்,
குத்தகைத்
தொகையை செலுத்தாமலிருப்பது மற்றும் பயிர்களுக்கு தீங்கு விளைவிப்பது போன்ற
காரணங்களைத் தவிர வேறு காரணங்களுக்காக குத்தகைத்தாரர்களை அவர்கள் சாகுபடி செய்யும்
நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவதை தடுப்பதற்கு இச்சட்டம் உதவி செய்கிறது.
1956-ஆம் ஆண்டின் தமிழ்நாடு சாகுபடி
குத்தகைதாரர்கள் (நியாய குத்தகை செலுத்துதல் சட்டம்).
· இச்சட்டத்தின் படி சாகுபடி குத்தகைத்தாரர்கள் நில சொந்தக்காரர்களுக்கு
மொத்த விளைச்சலில் 25% குத்தகையை செலுத்த இச்சட்டம்
வழிவகுக்கிறது.
1961-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது நம்பகங்க்ள்(Public Trust)(வேளாண்மை நிலங்களின் நிர்வாகம் (ம)
ஒழுங்குபடுத்துதல்) சட்டம்.(தமிழ்நாடு சட்டம் 57\61)
· நம்பகங்கள்(Trust) தங்களுடைய சொந்த சாகுபடிக்கு 20 தர ஏக்கர் நிலத்தை மட்டும் வைத்துக் கொண்டு,
அதற்கு
மேல் உள்ள நிலத்தை கட்டாயமாக பிறருக்கு குத்தகைக்கு விடவும் வகை
செய்யப்பட்டுள்ளது.
1969-ஆம் ஆண்டில் தமிழ்நாடு வேளாண்ம
நிலங்கள்(குத்தகை உரிமைகள் ஆவணம்)
· இச்சட்ட்த்தின் கீழ் வட்டாட்சியர், ஆணைக்கு எதிராகத் தொடரப்படும் வழக்கு மனுக்களை விசாரணை செய்து துணை
ஆட்சியர் நிலையில் மேல்முறையீடு அதிகாரிகளாகச் செயல்பட்டு வருகின்றனர்
· குத்தகைதாரராக பதிவு செய்வதற்கான
கோரிக்கைகள் வரப்பெற்றதும்/பட்டாதாரர்களையும் மனுதாரரையும் விசாரணை செய்தும் தக்க
ஆதாரங்களுடன் சாட்சிகளைப் பரிசீலனை செய்து கிராம நிர்வாக அலுவலரை விசாரணை செய்தும், இறுதியான உத்தரவை வட்டாட்சியர் வழங்குவார்.
· குத்தகைதாரர் பதிவேடு ஒன்றை கிராம நிர்வாக அலுவலர் பராமரிக்க வேண்டும, அடங்கலில் கலம் 7-இல் சிவப்பு மையால் குத்தகைதாரர் பெயர், குத்தகை தொகை ஆகிய விவரங்களை கிராம நிர்வாக அலுவலர் பதிய வேண்டும்.
கிராம
நிர்வாக அலுவலரின் பணிகள்
· கிராமத்தில் பதிவு பெற்ற குத்தகைதாரர்
மற்றும் பதிவு பெறாத குத்தகைதாரர் குறித்து அனைத்து விவரங்களையும் கிராம நிர்வாக
அலுவலர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
· குத்தகைத்தாரர்கள் யார் என்று அடையாளம்
காட்டும் பணி கிராம நிர்வாக அலுவலரின் பொறுப்பாகும்.
· உண்மையான குத்தகைதாரர்கள் பெயர்கள்
பதிவாகாமல் இருந்தால், இது சம்மந்தமாக முழு விபரங்களை கிராம
நிர்வாக அலுவலர் வட்டாட்சியருக்கு வழங்க வேண்டும்.
Subscribe to:
Posts
(
Atom
)
No comments :
Post a Comment