நில எடுப்பு
நில எடுப்பு:
· அரசுத் துறைகள் / அரசு நிறுவனங்களுக்கு
பொது நோக்கத்திற்காக நிலங்கள் தேவைப்படுகின்றன. அவ்வாறு தேவைப்படும் போது அரசு
நிலங்கள் இல்லாவிட்டால், 1894- ஆம் ஆண்டு நில எடுப்புச் சட்டத்தின் கீழ்
பட்டா நிலங்களைக் கையகப்படுத்தலாம்.
· கையகப்படுத்தும் செயல்முறைகளை
முடிப்பதற்கான கால அவகாசம் மூன்று ஆண்டுகள்.
· அரசுக்கு மிக விரைவாக நிலங்கள் தேவைப்படும் போது பிரிவு17(1) மற்றும் பிரிவு 17(2)-இன் கீழ் உடனடியாக நிலத்தை
கையகப்படுத்தலாம்.
கிராம
நிர்வாக அலுவலரின் பணிகள்:
· நில எடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தும்
போது சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்படும் அறிவிப்புகளை கிராமத்தில் அவ்வப்போது
விளம்பரம் செய்வதுடன் நோட்டீஸ்களை நில உரிமையாளரிடம் சரியான முறையில் சார்வு செய்ய
வேண்டும்.
· நிலத்தின் உண்மையான மதிப்பினை நில
எடுப்பு அலுவலருக்குத் தெரிவிக்கவும்,
கிராமக்
கணக்குகள் நகலை வழங்குவதும் கிராம நிர்வாக அலுவலரின் கடமையாகும்.
· சில சமயங்களில் நிலத்திற்கு அதிக
இழப்பீடு பெற, தீய நோக்கத்துடன் நிலமதிப்பை உயர்த்திக்
காட்டி பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு கிராம
நிர்வாக அலுவலர் நிலத்தின் உண்மையான மதிப்பை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளார்.
Subscribe to:
Posts
(
Atom
)
No comments :
Post a Comment