கொலை, தற்கொலை, அசாதாரண மரணம் நிகழும் போது கிராம நிர்வாக அலுவலர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
கொலை, தற்கொலை, அசாதாரண மரணம் நிகழும் போது கிராம நிர்வாக
அலுவலர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:
· மேற்கண்ட சம்பவம் நிகழும் போது, சம்பவத்தைத் தெரிவத்த தகவலாளரிடம் எழுத்து மூலமான வாக்குமூலம் பெற்று, சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டும் பிரேதத்தின் தன்மை குறித்து
காவல்துறைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
· குறிப்பு: கிராம நிர்வாக அலுவலர் மரன
விசாரணை மேற்கொள்ளக் கூடாது.
· கொலை,
தற்கொலை, அசாதாரண மரணம் ஏற்படும் நிகழ்வில் காவல்துறையினர் குற்றவியல் செயல்
நடுவருக்குத் (Exective Magistrates) தகவல் தெரிவிப்பார். அவர் குற்றவியல்
நடவடிக்கை சட்டம்
· பிரிவுகள் 174 மற்றும் 176-இன் படி பிரேத விசாரணை மேற்கொள்வார்.
· குற்றவியல் செயல் நடுவர் விசாரணையின்
பொது கிராம நிர்வாக அலுவலர் உடனிருந்து ஏற்பாடுகளும் உதவிகளு செய்தல் வேண்டும்.
கொலை, அசாதாரண மரணம் நிகழும் போது;
கொலை:
· உள்நோக்கத்திற்காக அல்லது ஆதாயத்திற்காக
கொல்ல வேண்டும் என்கிற எண்ணத்தில் கொலை செய்யப்படுவதற்கு இ.பி.கோ-302-இன்படி விசாரணை மேற்கொள்வார்.
அசாதாரண
மரணம்:
· கொலை செய்யப்படாமல் – வேறு வழிகளில்,
· சாலை விபத்து
· மின்சாரம் தாக்கி இறப்பு
· சுவர் விழுந்து இறப்பு
· விலங்குகளால் ஏற்படும் இழப்பு
· போன்ற அசாதாரண மரணத்தின் போது இ.பி.கோ-304-இன்படி விசாரணை மேற்கொள்வார்,
தூக்கினால்
ஏற்படும் மரணம்:
· கிராம நிர்வாக அலுவலர் – தம் அறிக்கையை
காவல்துறையினருக்கு அளிக்கும் போது கவனிக்க வேண்டியவைகள்.
· தூக்குக்கயிறு கழுத்தைச் சுற்றிலும்
இருக்கிறதா அல்லது கோணலாகவும் நேராகவும் இருக்கிறதா?
· கட்டுக் கயிறாக இருக்குமானால், முனையில் அறுக்கப்பட்டிருக்கிறதா?
· கட்டின் வடிவு கால்வாய் போல்
அமைந்திருக்கிறதா?
· கட்டு முடிச்சு, வலது கை வழக்கமுடையவரால் போடப்பட்டதா அல்லது இடது கை வழக்கமுடையவரால்
போடப்பட்டதா?
· கண்கள் வெளியே வந்திருக்கிறதா, கண்மணி விழுந்திருக்கிறதா?
· நாக்கு எப்படி இருக்கிறது?
· தலைமுடி அவிழ்ந்திருக்கிறதா?
· உடைகள் கிழிந்திருக்கின்றனவா?
· அறை உட்புறத்திக் பூட்டப்பட்டிருக்கிறதா? அறையின் நீளம், அகலம்,
உயரம்
அளவு என்ன?
· போன்ற சாதாரணமாகக் கண்களுக்குப்
புலப்படுகின்ற வெளிப்புறமாகத் தெரிகின்ற விவரங்களை சேகரித்து
· காவல்துறையினருக்கு மகஜர் (அறிக்கை)
தயார் செய்து அளிக்க வேண்டும்.
மகஜர்
(அறிக்கை) தயார் செய்யும் போது கவனிக்க வேண்டியவைகள்:
· கௌரவமுள்ள மூன்று கிராம முக்கியஸ்தர்களை
வைத்து விசாரணை நடத்த வேண்டும்.
· இதற்கான நமூனாவில் (முறைப்படி) மகஜர்
தயார் செய்ய வேண்டும்.
· மூன்று பிரதிகள் மகஜர் தயார் செய்து
ஒன்று வட்டாட்சியர் அல்லது கோட்டாட்சியருக்கு அனுப்ப வேண்டும். மற்றொன்று
எல்லைக்கு உட்பட்ட காவல்நிலையத்திற்கும்,
கடைசி
பிரதியை தமக்கும் வைத்துக்கொள்ள வேண்டும்
கிராமத்தில்
ஏற்படும் சமூக விரோதச் செயல்கள் குறித்து அறிக்கை அனுப்புதல்
· நிலவரி வசூல் மற்றும் அரசுப்பணியில்
இடையூற் ஏற்பட்டால் காவல்துறையின் – உதவியுடன் செயல்படலாம்.
· கிராம எல்லைக்குள் அசம்பாவித மரணம், கொள்ளை, சந்தேக மரணம் போன்ற நிகழ்வுகளை
அறிந்தவுடன் தம் எல்லைக்குட்பட்ட காவல்நிலைய பொறுப்பு அலுவலருக்கும் தகவல் அளிக்க
வேண்டும்.
· சந்தேகத்திற்கிடமான அந்நியர் நடமாட்டம்
மற்றும் கீழ்க்கண்ட சம்பவங்கள் பற்றி வட்டாட்சியருக்கும், காவல்துறையினருக்கும் தகவலறிக்கை அனுப்ப வேண்டும்.
· கிரிமினல் குற்றம்
· தற்செயலாக ஏற்படும் மரணம்.
· தற்கொலை.
· தீ விபத்து பற்றிய சம்பவங்கள்.
· கே.டி. ரிஜிஸ்டரில் (Known Depreadator Regiser) உள்ள நபர்களின் நடமாட்டம்.
· தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளின்
நடமாட்டம்.
· இனக் கலவரங்கள், சாதிக் கலவரங்கள்.
· கள்ளச் சாராயம் காய்ச்சுதல், போதைப் பொருள் நடமாட்டம் போன்றவை.
· கிராமத்தில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக
இறந்தாலோ.
· கிராமத்தின் பொது அமைதிக்கு பாதகம்
விளைவிக்கும் இடையூறுகள் செய்யப்பட்டாலோ.
· ஆயுதத்தினால் ஏற்படும் பிரச்சனைகள்.
· அரசின் பொதுச் சொத்திற்கு சேதம்
விளைவிக்கும் நோக்குடன் தெரிய வருகின்ற செயல்பாடுகள்.
· ஆடு,
மாடு
போன்ற கால்நடைகள் திருட்டு.
· சாலை மற்றும் இதர விபத்துகள்.
· ஆட்கடத்தல் குற்றங்கள்.
· குழந்தையைத் தொழிற்சாலை வேலையில்
ஈடுபடுத்துதல்.
· கொத்தடிமைகளை மீட்பு செய்தல்
· குழந்தைகளை திருடுதல்.
· பொது இடங்களில் மது அருந்துதல், சூதாட்டம் மேற்கொள்ளல்.
· கிணறு,
ஏரி, குளம், ஆறுகளில் கேட்பாரின்றி கிடக்கும்
பிணங்கள்
· போன்ற சூழ்நிலைகளில் கிராம நிர்வாக
அலுவலர் காவல்துறைக்குத் தகவல் அறிக்கை அனுப்ப வேண்டும். சமூகக் கலவரங்கள், சாதிக் கலவரங்கள் போன்ற பணிகளில் எந்தவொரு பிரிவினருக்கும் அனுசரணையாக
இல்லாமல் நடுநிலையுடன் பணிபுரிவது கிராம நிர்வாக அலுவலரின் தலையாய கடமையாகும்.
Subscribe to:
Posts
(
Atom
)
No comments :
Post a Comment