விழாக்கள் மற்றும் பொது அரசு விழாக்களின் போது கிராம நிர்வாக அலுவலரின் முக்கியப் பணிகள்
விழாக்கள் மற்றும் பொது அரசு விழாக்களின் போது கிராம நிர்வாக அலுவலரின்
முக்கியப் பணிகள்:
· கிராமத்தில் நிகழும் முக்கிய விழாக்களில்
கிராம நிர்வாக அலுவலர்களுக்கே பரிவட்டம் செய்து மரியாதை செய்வர்.
· கிராமத்தில் நிகழும் விழாக்களில் கிராம
நிர்வாக அலுவலரே சட்டம் ஒழுங்கு கெடாமல் நடைபெற முழு பாதுகாப்பு நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும்.
· கிராமத்தில் பொதுமக்களின் அமைதியை
பாதுகாக்கும் பொருட்டு அனுசரிக்கும் நடவடிக்கைகளுக்கு காவல் பணி என்று பெயர்.
· கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம
எல்லைக்குட்பட்டுள்ள காவல் நிலைய காவல்துறை அலுவலர்களுக்கு ஒன்றுபட்டு
ஒருங்கிணைந்து கிராமப் பொதுமக்களின் பொது அமைதி காத்திட பரஸ்பர ஆலோசனைகளையும்
உதவிகளையும் செய்து கொள்வது மிகவும் அவசியம்.
· கிராம விழாவில் ஏற்படும் சாதிப்
பிரிவினர் சண்டை, மதச்சண்டை போன்றவை நடைபெறும் போது கிராம
நிர்வாக அலுவலர் நிர்வாகத் துறைக்கு வருவாய் ஆய்வாளர் மூலம் வட்டாட்சியருக்கும்
வட்டாட்சியர் கோட்டாட்சியருக்கும், கோட்டாட்சியர் மாவட்ட ஆட்சியருக்கும்
தெரிவிக்க வேண்டும்.
· தேர் திருவிழா, கிறிஸ்துவர் தேவாலய திருவிழா, மசூதிகள் உள்ள பகுதிகளில் அடிக்கடி இந்த நிகழ்வுகள் அடிக்கடி நடக்கும்.
கிராம
ஊரடங்கு உத்தரவு:
கிராமத்தில்
மக்களின் நிலை சீர்குலைந்து சாதிச் சண்டை,
மதச்சண்டை
நடைபெறும் போது 144-இன் படி ஊரடங்கு உத்தரவை மாவட்ட ஆட்சியர்
பிறப்பித்து, காவல்துறையினர் காவலாளிகளை வைத்து அமைதி
நிகழும் வரை தடை ஆணை 144-ஐ விலக்காமல் வைத்திருப்பார்.
தடை ஆணை 144 பிறப்பிக்கும் போது கிராம நிர்வாக
அலுவலரின் கடமைகள்:
· இரண்டு சாதி அல்லது மதம் சார்பாக சண்டை
நடக்கும் காரணம் அறிந்து அவர்களைப் பற்றி விசாரணை செய்து அவர்கள் பற்றி ஓர்
அறிக்கை தயாரிக்க வேண்டும்.
· இரு தரப்பினரையும் (Peace Meeting) கிராம பிரமுகர் தலைமையிலோ வட்டாட்சியர்
முன்னிலையிலோ பேச்சு நடத்தி அமைதி நிலை பாடுபட வேண்டும்.
· அப்படி அமைதி நிகழாத நிலையில்
கோட்டாட்சியர் முன்னிலையில் அமைதிக் கூட்டம் (Peace Meeting) நடத்தி அமைதி நிலவ பாடுபட வேண்டும்.
· இரு தரப்பினரும் இந்நிகழ்வின் மூலம்
சேரதா நிலையில் – நீதிமன்ற வழக்கிற்கு VAO
தூண்ட
வேண்டும்.
· மேலும் பல்வேறு சட்ட ஒழுங்கு
நடவடிக்கைகளைப் பாதுகாக்கும்வண்ணம் VAO
நடந்து
கொள்ள வேண்டும்.
· ஆயுதங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதா
என ஆய்வு செய்ய வேண்டும். அவை வெடிபொருள் சட்டம் (Explosive Act) மற்றூம் ஆய்தச் சட்டம் (Arms Act) ஆகியவை மூலம் லைசன்ஸ்
புதுப்பிக்கப்பட்டுள்ளதா எனக் காண வேண்டும்.
· கொலை,
தற்கொலை
அசாதாரண மரணம் நேரிடும் போது காவல்துறைக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
· சந்தேகத்திற்கு இடமாக வெளிநாட்டவர் மற்றும் வெளியூரில் இருந்து வந்து புதிய
நபர்கள் தங்கியிருந்தால் அவர்களைப் பற்றி அறிய வேண்டும். மேலும் கிராமம் பற்றிய
குற்ற அறிக்கையை வட்டாட்சியருக்கும்,
காவல்துறைக்கும்
அனுப்ப வேண்டும்.
குற்றங்கள்
· கிரிமினல் குற்றங்கள் நடைபெறும்போது
· தற்செயலாக மரணம் ஏற்படும் போது
· தற்கொலையின் போதும்
· தீப்பற்றும் சம்பவத்தின் போது
· K.D. ரிஜிஸ்டரில் உள்ள நபர்களின் நடமாட்டம்
· தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளின்
நடமாட்டம்
· இனக்கலவரங்கள் ஏற்படும் போது
· கள்ளச்சாராயம் காய்ச்சுதல், போதைப் பொருள் நடமாட்டம்
· ஆயுதத்தினால் ஏற்படும் பிரச்சனை போன்ற நிகழ்வுகள் ஏதும் ஏற்படாவண்ணம் கிராம
நிர்வாக அலுவலர் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
கிராமப்
பொது விழாவின் போது VAO-வின்
பங்கு :
· கிராமங்களில் நலத்திட்டங்களை முழுவதுமாக VAO செயல்படுத்துகிறார்கள். இவர்கள் மூலம் அனைத்து சமூகப் பாதுகாப்புத்
திட்டங்களும் மற்ற திட்டங்களும் செயல்படுகிறது.
· மக்கள் கூட்டத்தை மாவட்டாட்சியர்
முன்னிலையில் நடத்தி கிராம மக்களின் நல அரசு திட்டம் பற்றி விழிப்புணர்வு
ஏற்படுத்தி மக்கள் பயனடையுமாறு செய்ய வேண்டும்.
· VAO இவ்விழா மூலம் அனைத்துக் குறைகளையும்
கேட்டு உடனே நிவர்த்தி செய்து விடுவார்.
Subscribe to:
Posts
(
Atom
)
No comments :
Post a Comment